Monday, July 18, 2016

பத்தி எழுத்து

ஒரு ஆரோக்கியமான இடைவெளிக்கு பிறகு பிளாகில் எழுத வருவது, சந்தோஷமான விஷயம். அவ்வப்பொழுது கொஞ்சம் சிறுகதைகள் எழுதி வந்தாலும், சிறுகதை தாண்டிய விஷயங்களை, பத்தி எழுத்து ஓரளவிற்கு சமன்படுத்தும் என்று நினைக்கிறேன். கணையாழியின் கடைசி பக்கம் போல, கல்கியின் சங்கீத விமர்சனங்கள் போல, கொஞ்சம் சுதந்திரக் காற்றோடு எழுத நினைக்கிறேன்.

சமீபத்தில் இரண்டு முத்துக்கள் கிடைத்தன. மறைமலை அடிகளார் எழுதிய "மரணத்திற்கு பின் மனிதர் நிலை", போஸ் எழுதிய "சினிமா பக்கங்கள்". இரண்டுமே, சுவாரசியமாக இருந்தது.

மரணம் என்பதை ப்ரெய்ன் டெட் என்கிற ஒற்றைப் பதத்தில், விஞ்ஞானம் நிறுவுகிறது. அதற்கு பின் என்கிற கேள்விக்கு, நமக்கு சாதகமான பதில் ஒன்றும் விஞ்ஞானம் வழங்கவில்லை. முதலில், மரணத்திற்கு பின் ஒன்று ஏன் இருக்க வேண்டும் என்கிற உப கேள்வியை வைக்கிறது. நாம் எல்லாருமே நம் மரணத்திற்கு பிறகு, ஏதோ ஒரு ரூபத்தில் தொடர விழைகிறோம்.


சமய இலக்கியங்களிலும், சித்தர் பாடல்களிலும், மதங்களிலும் மறுபிறவி பற்றி நிறைய இருக்கிறது. அடிகளாரின் புத்தகத்தில்
 சூட்சம சரீரம், காரண சரீரம் பற்றி எல்லாம்
எழுதி இருக்கிறார்.  


வேதாத்ரி மஹரிஷியின் பிறப்பிற்கு முன் மரணத்திற்கு பின், , யூடியூபில் தேடிப் பாருங்கள். நிறைய புரியும்.
போஸ் எழுதிய சினிமா பக்கங்கள், சினிமாவின் இன்னொரு முகத்தை தோலுரிக்கிறது. ப்ரட்யூசர்கள் கோலோச்சிய சினிமா, இப்போது எப்படி நடிகர்களின் கைவசம் மாறி இருக்கிறது. கதை திருட்டு. நடிகைகளின் கற்பு. நாம் பார்த்து வியக்கும் பெரிய நடிகர்களின் இமேஜ் வளையம். சினிமாத் துறைக்கு போக இருப்பவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம்.









No comments:

Post a Comment