ஒரு வழியாய் கபாலித் திருவிழா தொடங்கிவிட்டது. இணையம், தொலைக்காட்சி, முகநூல் முழுவதும் கபாலிக புராணம். உலக அளவில், ஒரு நடிகருக்கு இத்தனை கூட்டம் கூடுவது பெரிய விஷயம். சிறுவயதில் வாயைப் பிளந்து கொண்டு பார்த்த, ரஜினியின் பிம்பம் நாளடைவில் என் அளவில் மிகவும் சுருங்கி விட்டது. எல்லா படங்களிலும் அதே பின்புலம், அநியாயத்தை எதிர்க்கும், அசகாய சூரன். ஒவ்வொரு படம் ரிலீஸ் செய்யும் பொழுது, ஏதோ ஒரு வியாபார யுக்தி. தேங்காய் உடைத்து, கற்பூரம் காண்பித்து, பாலபிஷேகம் செய்து, கடவுளின் அவதாரகமாக பிம்பப்படுத்தியிருக்கிறார்கள்.
விர்சுவல் என்பதும், ரியல் என்பதும் வெவ்வேறானவை. திரை வேறு,நிஜம் வேறு.
மக்களுக்கு கொண்டாட ஒரு காரணம் வேண்டும். யாரையாவது ஒருவரை, தலைவனாக ஏற்றுக் கொள்ளவேண்டும். பழைய காலத்தில், புலவர்கள் ராஜாவை புகழ்ந்து பாடி, சன்மானம் பெற்று சென்றதைப் போல.
இதில் கலை எங்கே இருக்கிறது?
மிக நல்ல படங்கள் எந்த ஆரவாரமும் இல்லாமல் வந்து கொண்டுதானிருக்கின்றன.
படம் எடுத்தவர்களுக்கும், நடித்தவர்களுக்கும் நல்ல சம்பாத்தியம். ஆனால், படம் பார்ப்பவர்களுக்கு?
விர்சுவல் என்பதும், ரியல் என்பதும் வெவ்வேறானவை. திரை வேறு,நிஜம் வேறு.
மக்களுக்கு கொண்டாட ஒரு காரணம் வேண்டும். யாரையாவது ஒருவரை, தலைவனாக ஏற்றுக் கொள்ளவேண்டும். பழைய காலத்தில், புலவர்கள் ராஜாவை புகழ்ந்து பாடி, சன்மானம் பெற்று சென்றதைப் போல.
இதில் கலை எங்கே இருக்கிறது?
மிக நல்ல படங்கள் எந்த ஆரவாரமும் இல்லாமல் வந்து கொண்டுதானிருக்கின்றன.
படம் எடுத்தவர்களுக்கும், நடித்தவர்களுக்கும் நல்ல சம்பாத்தியம். ஆனால், படம் பார்ப்பவர்களுக்கு?
No comments:
Post a Comment