"இன்னிக்கு சாயந்திரம் ஷாப்பிங் போகணும்" என்று மனைவி சொன்னதுமே, வாசுவிற்கு திக்கென்றிருந்தது.
ஏன் என்று கேட்க நினைத்தான்.
அதற்கு இடம் கொடாமல், லட்சுமியே காரணமும் சொன்னாள்.
"ஊரிலிருந்து அக்காவும், அத்திம்பேரும் வந்திருக்கா....நாலு நாளா, ஆத்துலயே முடங்கி இருக்கா...வெளியிலே, வாசல்ல எங்கேயாவது கூட்டிண்டு போனாத்தானே, அவாளுக்கும் போரடிக்காம இருக்கும்"
"அமெரிக்கால பார்க்காதே ஷாப்பிங்கா? "
"என்ன இப்படி சொல்லிட்ட்டேள் ......ஆயிரம் சொன்னாலும், பெங்களூர் மாதிரி வருமா?" என்றாள்...
வாசுவுக்கு ஷாப்பிங் என்றாலே அலர்ஜி. அதுவும் லீவ் நாளன்று பெங்களூரில் ஷாப்பிங் வைபவம் ஒரு அக்கப்போர். எல்லா இடங்களிலும் சகட்டு மேனிக்கு ட்ராபிக் ஜாம்.
அதுவும் ஷாப்பிங் மால்களில் நிலவும் கூட்டம் இருக்கிறதே. எல்லாரும் ஏதோ அமெரிக்காவிலிருந்து பறந்து வந்தவர்கள் மாதிரி, உடை என்ன, வாசலில் நின்று கார்ன் (சோளக்கருதின் நாகரீக பெயர்) சாப்பிடுவது என்ன....
மடிவாளாவிலிருந்து ஓரடி, ஓரடியாக சந்தபுராவை அடைவதற்கே சாயந்திரம் ஆகி விடும்.
இப்ப அவசியம் போயே ஆகணுமா?
லட்சுமி இன்ஸ்டன்ட் ஆக, கண்ணீர் விட்டாள்.
"இப்பதானே பர்ஸ்ட் டைம் வரா...நம்மள பத்தி என்ன நினைப்பா?"
லட்சுமியின் அக்கா வீட்டிற்கு முதல் தடவை , சென்னைக்கு சென்ற போது, கார் கூட ரெயில்வே ஸ்டேஷனுக்கு அனுப்பவில்லை. சென்ட்ரலிலிருந்து பார்க் வந்து, இன்னொரு ட்ரெயினை பிடித்து, மவுண்ட்டில் இறங்கி, ஷேர் ஆட்டோ பிடித்து, அத்தனை லக்கேஜ்களுடன் போய் இறங்கினோம். கார் ரிப்பேர் என்று கதை விட்டார்கள். சிலவற்றை சொல்ல முடியாது.
எங்கிருந்தோ ஒட்டுக் கேட்டுக் கொண்டு, சகலை கிருஷ்ணனும், அவனுடைய தர்மபத்தினி பானுவும் வந்து சேர்ந்தார்கள்.
"க்ரிஷ்"
பானு கணவனை அமெரிக்கா சென்றதிலிருந்து கடந்த இரண்டு வருடங்களாக இப்படித்தான் அழைக்கிறாள்.
"சொல்லுடா"
இது அவன் கணவன்.
"ஐ திங்க் வாசு இஸ் நாட் கம்பார்ட்டபிள்....ஒய் நாட் வி கோ?" என்றாள்.
'சே, சே...அப்படி எல்லாம் இல்ல...சீக்கிரம் போனா, ட்ராபிக் இருக்காது....அதுதான் சொல்லிண்டுருந்தார்..'
லட்சுமி பரிந்து கொண்டு வர, சாயந்திரம் எங்கள் பயணம் ஆரம்பமானது.
ஆல்டோ காரில் ஐந்து பேருக்கு இடம் பத்தவில்லை. வாசு ட்ரைவர் சீட்டில் உட்கார்ந்து கொண்டான். நீங்கள் ட்ரைவ் பண்ணுகிறார்களா?
நோ வே....இண்டியன் ட்ராபிக் இஸ் கிரேஸி"
முதல் சோதனை, செயின்ட் ஜான் ஆஸ்பத்திரி சிக்னலில் தொடங்கியது. ரோடு டைவர்ட் பண்ணி விட்டதில், எது ஒன் வே என்று தெரியவில்லை.
பின்னால் ஹாரன் சத்தங்கள்.
இருய்யா, போறேன்....என்று தமிழில் கத்தினான்.
பேக ஹோகிப்பா என்று பைக் காரன் அட்வைஸ் செய்து, சிக்னல் திறந்ததும் பறந்தான். .
திஸ் இஸ் ஸ்ட்ரென்ச்....அமெரிக்கால எல்லாம் இப்படி பார்க்க முடியாது...கூல் வாசு என்றான் கிருஷ்ணன் .
ஒரு வழியாக நகரின் வெளிப்புறத்தில் இருந்த ஷாப்பிங் மாலை ஏழு மணிக்கு அடைந்தார்கள். .
பார்க்கிங்கில் கடைசியில், கிட்டத்தட்ட ஓசூர் அருகே காரை நிறுத்த இடம் கிடைத்தது. வாசலிலேயே, பிரம்மாண்ட பொம்மை ஒன்றில் இருந்த மனிதன் கை கொடுத்தான்.
கிரவுண்ட் ப்ளோர் முழுக்க துணி, மணி செக்ஷன். ரெண்டு சுடிதார்கள் எடுத்துக் கொண்டார்கள். அவர்கள் முன்னால், பில்லை பார்த்தால், ஏதாவது நினைத்துக் கொள்வார்கள் என்று, தூண் மறைவில் பார்த்தான். ரெண்டாயிரம் என்றது. ரெண்டாயிரத்தில், சேலத்தில் ஐந்து சுடிதார் எடுக்கலாம் என்று தோன்றியது.
கேட்டால், என்னிக்கோ ஒரு நாள் வரா.....என்பாள்.
அதற்கு இவளுக்கும் ஏன் ஒன்று வாங்க வேண்டும்? கேட்டால், ஞாபகார்த்தம்....
சனியன், ரெண்டாயிரத்தோட விட்டது என்று நினைத்துக் கொண்டான்.
பர்ஸ்ட் பிளோரில், மளிகை ஐட்டம்கள். வரிசையாய், எண்ணெய் செக்ஷன். பருப்பு செக்ஷன். அழகாய் அடுக்கி வைத்திருந்தார்கள்.
உள்ளே நுழைந்ததும், ஒருவன் ஏதோ நோட்டீஸ் போல கொடுத்தான்.
என்னய்யா? என்றான் வாசு எரிச்சலோடு.
இன்னிக்கு என்ன ஆபர்னு போட்டிருப்பான். என்றாள் லட்சுமி.
சக்கர வண்டி டிராலி வரிசையில் காத்திருந்தது.
முதலில் ஓட்ஸ் எடுத்தாள்...
ஏண்டி, ஆத்துலதான் கம்பு குருணை இருக்கே
இதுவும் இருக்கட்டுமே
ஏண்டி அது கிலோ முப்பது ரூபா, இது கிலோ இருநூறு ரூபாயாச்சே? என்று கேட்க நினைத்தான்.
கூட இருந்த அமெரிக்கா தடுத்தது.
ஒன் ப்ளஸ் ஒன்னில் ரெண்டு மேங்கோ ஜூஸ் எடுக்கலாமா?
ஏண்டி, நம்மாத்திலே ரெண்டு பேர்தான் இருக்கோம்..எதுக்கு ரெண்டு பாட்டில்
ஆபர்னா
அதுக்காக ரெண்டு மாசம் வச்சிருந்து மேங்கோ ஜூஸ் குடிப்பியா? தேவைப்பட்ட பொழுது, மாம்பழமே வாங்கி ஜூஸ் போட்டுக்க கூடாதோ?
அமெரிக்கா பார்த்ததால் மேற்கொண்டு எதுவும் சொல்லவில்லை.
பிஸ்கட் செக்ஷனில் சகட்டு மேனிக்கு, எல்லாம் க்ரீம் பிஸ்கட்கள். பல் கெட்டுப்போகும் என்று சொல்ல நினைத்தான். அமெரிக்கா ?!
எல்லா செக்ஷனிலும் வாடிக்கையாளரை கவர, ஒன்று வாங்கினால், ஒன்று பிரீ என்றது. பாடி ஸ்பிரேயரா? பேரீச்சம்பழமா?
ஒரு பொருள் எடுத்தால், இன்னொரு கவரும் சேர்ந்து வந்தது.
ஒரு வழியாக ஷாப்பிங் முடிந்து, வெளியே வந்த பொழுது இரவு ஒன்பதரை ஆகி விட்டது.
இனிமே போய், ஆத்துல டிபன் செய்றது கஷ்டம் என்று, ட்ரைவ் இனில் சாப்பிட்டார்கள். சாம்பார் வராதபொழுதெல்லாம், வாசுவே போக வேண்டி இருந்தது. சாப்பிட்டதை விட, சாம்பாருக்கு அலைந்ததுதான் அவமானமாய் இருந்தது.
திரும்பி வரும் பொழுது, பதினோரு மணி ஆகி விட்டது. டோமலூரில் தெரிந்த நாய்கள் குலைத்தது.
மாடியில் சிகரெட் குடித்துக் கொண்டிருந்த பொழுது, வாசு கேட்டான்.
"அமெரிக்கால எல்லாம் ஷாப்பிங் எப்படி?"
"இட் வுட் பி குட் ...பெரிய பெரிய மால் இருக்கு அங்கே....வி ஸ்பென்ட் ஹோல் டே பார் பர்சைஸ்..."
"அப்படியா? "
"இந்தியா இன்னும் பின் தங்கி இருக்கு "
"எதை வச்சி சொல்றேள்?"
"நீங்களும் ஐந்து வருஷமா, உங்க கார கூட மாத்தலே....அங்க, வருஷம், ஒண்ணு மாத்திடுவோம்..."
"இவ்வளவு செலவு பண்றேளே, அவ்வளவு வருமானம் இருக்கா?"
கொஞ்சம் தயங்கினார் க்ரிஷ்.
"அப்படி சொல்ல முடியாது "
"அப்புறம் எப்படி இவ்வளவு செலவு செய்றேள் "
"எல்லாம் க்ரெடிட் கார்ட்....கடன்....புலி வால் பிடிச்ச கதை "
"அத்தனை கடன் வாங்கி என்ன பிரயோஜனம்? திரும்பி நாமதானே அடைக்கணும்....."
"கடன் அடைக்க முடிஞ்சிருந்தா, இன்னும் நான் ஏன் அங்கேயே இருக்கேன்? எப்போவோ இங்க வந்திருப்பேனே....."
ஏன் என்று கேட்க நினைத்தான்.
அதற்கு இடம் கொடாமல், லட்சுமியே காரணமும் சொன்னாள்.
"ஊரிலிருந்து அக்காவும், அத்திம்பேரும் வந்திருக்கா....நாலு நாளா, ஆத்துலயே முடங்கி இருக்கா...வெளியிலே, வாசல்ல எங்கேயாவது கூட்டிண்டு போனாத்தானே, அவாளுக்கும் போரடிக்காம இருக்கும்"
"அமெரிக்கால பார்க்காதே ஷாப்பிங்கா? "
"என்ன இப்படி சொல்லிட்ட்டேள் ......ஆயிரம் சொன்னாலும், பெங்களூர் மாதிரி வருமா?" என்றாள்...
வாசுவுக்கு ஷாப்பிங் என்றாலே அலர்ஜி. அதுவும் லீவ் நாளன்று பெங்களூரில் ஷாப்பிங் வைபவம் ஒரு அக்கப்போர். எல்லா இடங்களிலும் சகட்டு மேனிக்கு ட்ராபிக் ஜாம்.
அதுவும் ஷாப்பிங் மால்களில் நிலவும் கூட்டம் இருக்கிறதே. எல்லாரும் ஏதோ அமெரிக்காவிலிருந்து பறந்து வந்தவர்கள் மாதிரி, உடை என்ன, வாசலில் நின்று கார்ன் (சோளக்கருதின் நாகரீக பெயர்) சாப்பிடுவது என்ன....
மடிவாளாவிலிருந்து ஓரடி, ஓரடியாக சந்தபுராவை அடைவதற்கே சாயந்திரம் ஆகி விடும்.
இப்ப அவசியம் போயே ஆகணுமா?
லட்சுமி இன்ஸ்டன்ட் ஆக, கண்ணீர் விட்டாள்.
"இப்பதானே பர்ஸ்ட் டைம் வரா...நம்மள பத்தி என்ன நினைப்பா?"
லட்சுமியின் அக்கா வீட்டிற்கு முதல் தடவை , சென்னைக்கு சென்ற போது, கார் கூட ரெயில்வே ஸ்டேஷனுக்கு அனுப்பவில்லை. சென்ட்ரலிலிருந்து பார்க் வந்து, இன்னொரு ட்ரெயினை பிடித்து, மவுண்ட்டில் இறங்கி, ஷேர் ஆட்டோ பிடித்து, அத்தனை லக்கேஜ்களுடன் போய் இறங்கினோம். கார் ரிப்பேர் என்று கதை விட்டார்கள். சிலவற்றை சொல்ல முடியாது.
எங்கிருந்தோ ஒட்டுக் கேட்டுக் கொண்டு, சகலை கிருஷ்ணனும், அவனுடைய தர்மபத்தினி பானுவும் வந்து சேர்ந்தார்கள்.
"க்ரிஷ்"
பானு கணவனை அமெரிக்கா சென்றதிலிருந்து கடந்த இரண்டு வருடங்களாக இப்படித்தான் அழைக்கிறாள்.
"சொல்லுடா"
இது அவன் கணவன்.
"ஐ திங்க் வாசு இஸ் நாட் கம்பார்ட்டபிள்....ஒய் நாட் வி கோ?" என்றாள்.
'சே, சே...அப்படி எல்லாம் இல்ல...சீக்கிரம் போனா, ட்ராபிக் இருக்காது....அதுதான் சொல்லிண்டுருந்தார்..'
லட்சுமி பரிந்து கொண்டு வர, சாயந்திரம் எங்கள் பயணம் ஆரம்பமானது.
ஆல்டோ காரில் ஐந்து பேருக்கு இடம் பத்தவில்லை. வாசு ட்ரைவர் சீட்டில் உட்கார்ந்து கொண்டான். நீங்கள் ட்ரைவ் பண்ணுகிறார்களா?
நோ வே....இண்டியன் ட்ராபிக் இஸ் கிரேஸி"
முதல் சோதனை, செயின்ட் ஜான் ஆஸ்பத்திரி சிக்னலில் தொடங்கியது. ரோடு டைவர்ட் பண்ணி விட்டதில், எது ஒன் வே என்று தெரியவில்லை.
பின்னால் ஹாரன் சத்தங்கள்.
இருய்யா, போறேன்....என்று தமிழில் கத்தினான்.
பேக ஹோகிப்பா என்று பைக் காரன் அட்வைஸ் செய்து, சிக்னல் திறந்ததும் பறந்தான். .
திஸ் இஸ் ஸ்ட்ரென்ச்....அமெரிக்கால எல்லாம் இப்படி பார்க்க முடியாது...கூல் வாசு என்றான் கிருஷ்ணன் .
ஒரு வழியாக நகரின் வெளிப்புறத்தில் இருந்த ஷாப்பிங் மாலை ஏழு மணிக்கு அடைந்தார்கள். .
பார்க்கிங்கில் கடைசியில், கிட்டத்தட்ட ஓசூர் அருகே காரை நிறுத்த இடம் கிடைத்தது. வாசலிலேயே, பிரம்மாண்ட பொம்மை ஒன்றில் இருந்த மனிதன் கை கொடுத்தான்.
கிரவுண்ட் ப்ளோர் முழுக்க துணி, மணி செக்ஷன். ரெண்டு சுடிதார்கள் எடுத்துக் கொண்டார்கள். அவர்கள் முன்னால், பில்லை பார்த்தால், ஏதாவது நினைத்துக் கொள்வார்கள் என்று, தூண் மறைவில் பார்த்தான். ரெண்டாயிரம் என்றது. ரெண்டாயிரத்தில், சேலத்தில் ஐந்து சுடிதார் எடுக்கலாம் என்று தோன்றியது.
கேட்டால், என்னிக்கோ ஒரு நாள் வரா.....என்பாள்.
அதற்கு இவளுக்கும் ஏன் ஒன்று வாங்க வேண்டும்? கேட்டால், ஞாபகார்த்தம்....
சனியன், ரெண்டாயிரத்தோட விட்டது என்று நினைத்துக் கொண்டான்.
பர்ஸ்ட் பிளோரில், மளிகை ஐட்டம்கள். வரிசையாய், எண்ணெய் செக்ஷன். பருப்பு செக்ஷன். அழகாய் அடுக்கி வைத்திருந்தார்கள்.
உள்ளே நுழைந்ததும், ஒருவன் ஏதோ நோட்டீஸ் போல கொடுத்தான்.
என்னய்யா? என்றான் வாசு எரிச்சலோடு.
இன்னிக்கு என்ன ஆபர்னு போட்டிருப்பான். என்றாள் லட்சுமி.
சக்கர வண்டி டிராலி வரிசையில் காத்திருந்தது.
முதலில் ஓட்ஸ் எடுத்தாள்...
ஏண்டி, ஆத்துலதான் கம்பு குருணை இருக்கே
இதுவும் இருக்கட்டுமே
ஏண்டி அது கிலோ முப்பது ரூபா, இது கிலோ இருநூறு ரூபாயாச்சே? என்று கேட்க நினைத்தான்.
கூட இருந்த அமெரிக்கா தடுத்தது.
ஒன் ப்ளஸ் ஒன்னில் ரெண்டு மேங்கோ ஜூஸ் எடுக்கலாமா?
ஏண்டி, நம்மாத்திலே ரெண்டு பேர்தான் இருக்கோம்..எதுக்கு ரெண்டு பாட்டில்
ஆபர்னா
அதுக்காக ரெண்டு மாசம் வச்சிருந்து மேங்கோ ஜூஸ் குடிப்பியா? தேவைப்பட்ட பொழுது, மாம்பழமே வாங்கி ஜூஸ் போட்டுக்க கூடாதோ?
அமெரிக்கா பார்த்ததால் மேற்கொண்டு எதுவும் சொல்லவில்லை.
பிஸ்கட் செக்ஷனில் சகட்டு மேனிக்கு, எல்லாம் க்ரீம் பிஸ்கட்கள். பல் கெட்டுப்போகும் என்று சொல்ல நினைத்தான். அமெரிக்கா ?!
எல்லா செக்ஷனிலும் வாடிக்கையாளரை கவர, ஒன்று வாங்கினால், ஒன்று பிரீ என்றது. பாடி ஸ்பிரேயரா? பேரீச்சம்பழமா?
ஒரு பொருள் எடுத்தால், இன்னொரு கவரும் சேர்ந்து வந்தது.
ஒரு வழியாக ஷாப்பிங் முடிந்து, வெளியே வந்த பொழுது இரவு ஒன்பதரை ஆகி விட்டது.
இனிமே போய், ஆத்துல டிபன் செய்றது கஷ்டம் என்று, ட்ரைவ் இனில் சாப்பிட்டார்கள். சாம்பார் வராதபொழுதெல்லாம், வாசுவே போக வேண்டி இருந்தது. சாப்பிட்டதை விட, சாம்பாருக்கு அலைந்ததுதான் அவமானமாய் இருந்தது.
திரும்பி வரும் பொழுது, பதினோரு மணி ஆகி விட்டது. டோமலூரில் தெரிந்த நாய்கள் குலைத்தது.
மாடியில் சிகரெட் குடித்துக் கொண்டிருந்த பொழுது, வாசு கேட்டான்.
"அமெரிக்கால எல்லாம் ஷாப்பிங் எப்படி?"
"இட் வுட் பி குட் ...பெரிய பெரிய மால் இருக்கு அங்கே....வி ஸ்பென்ட் ஹோல் டே பார் பர்சைஸ்..."
"அப்படியா? "
"இந்தியா இன்னும் பின் தங்கி இருக்கு "
"எதை வச்சி சொல்றேள்?"
"நீங்களும் ஐந்து வருஷமா, உங்க கார கூட மாத்தலே....அங்க, வருஷம், ஒண்ணு மாத்திடுவோம்..."
"இவ்வளவு செலவு பண்றேளே, அவ்வளவு வருமானம் இருக்கா?"
கொஞ்சம் தயங்கினார் க்ரிஷ்.
"அப்படி சொல்ல முடியாது "
"அப்புறம் எப்படி இவ்வளவு செலவு செய்றேள் "
"எல்லாம் க்ரெடிட் கார்ட்....கடன்....புலி வால் பிடிச்ச கதை "
"அத்தனை கடன் வாங்கி என்ன பிரயோஜனம்? திரும்பி நாமதானே அடைக்கணும்....."
"கடன் அடைக்க முடிஞ்சிருந்தா, இன்னும் நான் ஏன் அங்கேயே இருக்கேன்? எப்போவோ இங்க வந்திருப்பேனே....."
No comments:
Post a Comment