Thursday, June 16, 2016

என் கால் பதித்த தடங்கள் - 1

நேற்று இரவு சென்னையிலிருந்து அன்பர் ஒருவர் அழைத்திருந்தார். நான் ப்ளாகில் கிறுக்குவதைப் பற்றி பேசத்தான். நல்ல வேளையாக, நீங்கள் எல்லாம் ஏன் எழுத வந்தீர்கள் என்று கேட்கவில்லை. உங்களுக்கு எப்படி நேரம் கிடைக்கிறது? ஒரு வேளை, வேலையை விட்டு விட்டாயா? என்கிற ரீதியில் தொடங்கினார். பெரும்பாலனவர்கள் போல, எனக்கு பேஷனும், ப்ரோபஷனும் வேறு. வயிறு நிறைவதற்க்கும், மனது நிறைவதற்க்கும் நிறைய வித்யாசங்கள் இருக்கின்றன. என் தொழிலில் நிறைய மனிதர்களை சந்திக்கிறேன். நிறைய ஊர்களுக்கு பிரயாணிக்கிறேன். பலர் என்னிடம் தனிமையில் அழுதிருக்கிறார்கள். நிறைய காதல் தோல்வி கதைகள் கேட்டிருக்கிறேன். தற்கொலை வரை சென்றவரை சந்தித்திருக்கிறேன்.  நான் மட்டும் அல்ல. நாம் எல்லாரும்தான். நாம் எல்லாருமே நிறைய அனுபவங்களோடுதான்  வாழ்கிறோம். இத்தனை அறிவியல் கண்டுபிடிப்புகள் வந்தும், இன்னும் மனிதன் பல குறைகளோடுதான் வாழ்கிறான். அதுவும் இயற்கைதானே? நம்மில் குறைகள் இல்லாதார் யார்? நான் படித்த இலக்கியங்கள் எனக்கு நிறைய சொல்லிக் கொடுத்திருக்கிறது. என்னை மேம்படுத்தி இருக்கிறது. இதன் வாயிலாக, ஓயாமல் உங்களைத் தொடர்பு கொள்வதே என் எழுத்தின் நோக்கம். நல்லதோ, தீயதோ யாரோ ஒருவர் நம் எழுத்துக்களைப் பற்றி பேசுவதே, ஒரு நல்ல ஆரம்பம்தான். தொடங்கி விட்டேன். தொடருங்கள்.

No comments:

Post a Comment