சேலத்தில் படித்துக் கொண்டிருந்த நாட்களில், பெரிதாக எந்த கவலையும் எழுந்ததில்லை. எஸ் எஸ் எல் சி நுழைந்ததிலிருந்து, எப்போதும் ஒரு பயம் சூழ்ந்து கொண்டே இருந்தது.
ஊருக்கு வரும் மாமாவிற்கெல்லாம் இது ஒரு பொழுதுபோக்காக இருந்தது.
வாடா! இந்த வருஷம் எஸ் எஸ் எல் சி யா? இதுதான் உன் வாழ்க்கையையே தீர்மானிக்கப் போறது....நன்னா படி
போதும் போதாதற்கு டியூஷன் வேறு சேர்த்து விட்டார்கள். காலையிலும், மாலையிலும் இரண்டு பேட்ச்கள். தெரு முழுவதும் சைக்கிள்கள் நிறைந்திருக்கும்.
இந்த அவஸ்தையிலும், எனக்கு ஒரே ஒரு எண்ணம் மட்டும் மிகத் தெளிவாக இருந்தது. எப்படியாவது சிவாவை விட மார்க் எடுத்து விட வேண்டும்.
சிவாவுக்கும் எனக்குமான நட்பு சங்ககால நட்பு. ஒண்ணாவதிலிருந்து பத்தாவது வரை ஒரே வகுப்பில் படித்தோம். சேர்ந்து நிறைய சினிமா பார்த்திருக்கிறோம்.
எங்களுக்குள் மற்றதில் அத்தனை நட்பு இருந்தாலும், படிப்பு விஷயத்தில் நாங்கள் என்றும் நேர்மையாக இருந்து கொண்டது இல்லை. இது இருவருக்கும் தெரியும். வெளிக்காட்டிக் கொண்டதே இல்லை.
மிக நன்றாக பரிட்சை எழுதி விட்டு, முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு வருவான்.
எப்படிடா எழுதின?
ச்
ஏண்டா?
ஐந்து மார்க் கணக்கு ஒண்ணு விட்டுட்டேண்டா....நீ?
மனதிற்குள் சந்தோஷமாக இருந்தாலும், அதே சோக பாவத்தோடு
நான் க்ராப் சரியா போடலடா...
எங்களுக்கு போட்டியாக நாங்கள் வேறு யாரையும் வைத்துக் கொண்டதில்லை. இன்னும் சொல்லப் போனால், போட்டியே எங்களுக்குள்தான். இருப்பினும் எங்கள் நட்பு வேறு பல நல்ல காரணங்களால் தொடர்ந்தது.
ஒவ்வொரு முறை மார்க் ஷீட் கொடுக்கும் பொழுது, சதியாக அவன் மார்க்கை முதலில் தெரிந்து கொள்ள முயற்சி செய்வேன். அவனும் லேசுப்பட்டவன் இல்லை. சாதாரணத்தில் சொல்லி விட மாட்டான். அவனை கொஞ்சம் தாஜா செய்து, கரெக்ட் பண்ணி மார்க் தெரிந்து கொள்வதற்குள் போதும் போதும் ஆகி விடும்.
இதற்கு நடுவில் எங்களின் எஸ் எஸ் எல் சீ பரிட்சையும் நடந்து முடிந்தது.
லீவில் நான் தினமும் சிவாவின் கடைக்கு செல்வேன். அது ஒரு உலர்சலவையகம். நாங்கள் பாட்டிற்கு ஏதோ பேசிக்கொண்டிருப்போம். யாரோ வந்து பில்லைத் தருவார்கள். இவன் நம்பரை பார்த்து, துணி எடுத்துக் கொடுப்பான். மீண்டும் பேச்சைத் தொடருவோம். எங்களுக்கு விஷயமா இல்லை?
அப்போது ரிலீஸ் ஆன புது சினிமா, கிரிக்கெட் மேட்ச், ஸ்கூல், கடைசியாக எங்களின் வரப் போகும் எஸ் எஸ் எல் சீ ரிசல்ட்.
ரிசல்ட்டை நினைக்க நினைக்க எங்களுக்கு திகில் ஆக இருந்தது. தினமும் கேட்பான்.
"எவ்வளவுடா வரும்? ஒரு முந்நூற்று ஐம்பது?"
"சே சே...அவ்வளவு கம்மியா வராது...மினிமம் நானூறுக்கு குறையாது "
"எப்படி சொல்றே?"
"தமிழ் எடுத்துக்கோ ......முதல் தாள்...ஒரு தொன்னூறு வை..."
"நான்லாம் அவ்வளவு நல்லா எழுதலப்பா...ஒரு எண்பது வை...."
"சரி...எண்பது .....அப்புறம், ரெண்டாவது தாள், ஒரு எண்பது வை..."
"ரெண்டாவது தாள் ரொம்ப கஷ்டம்......இலக்கணக்குறிப்பிலேயே எட்டு மார்க் போயிடிச்சு...அறுபது வை"
அவன் இப்படி சொல்லி, சொல்லியே முன்னூற்றி ஐம்பதுக்கு கொண்டு வந்து விடுவான்.
அவனே முன்னூற்றி ஐம்பது என்றால்? என் கதியை நினைத்து எங்கேயாவது அழ வேண்டும் போலிருந்தது. இத்தனைக்கும் அவனுக்கு மேத்ஸ் தண்ணி பட்ட பாடு. நான் எப்போதும் சொதப்புவேன்.
இப்படி ஒருவாறு எங்கள் நட்பு சென்று கொண்டிருந்த தினங்களில், அஷோக் ரகசியமாக வந்து சொன்னான்.
"வெங்கட்...உனக்கு விஷயம் தெரியுமா? சிவாவோட எஸ் எஸ் எல் சீ ரிசல்ட் தெரிஞ்சிடிச்சி"
நான் அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை.
"இன்னும் ரெண்டு நாள் கழிச்சுத்தான் ரிசல்ட் வரும்? எப்படிடா அவன் மார்க் மட்டும் தெரிஞ்சது ? எவ்வளவுடா?
"எப்படின்னு தெரியல....ஏதோ தெரிஞ்சவங்க மெட்ராஸ்ல இருக்காங்களாம்...அவங்க மூலமா வாங்கி இருக்காங்க... ஆனா, மார்க் எவ்வளவுன்னு சொல்ல மாட்டேங்கறான்"
நான் உடனே விரைந்தேன்.
என்னைப் பார்த்ததும் சிவாவிற்கு அதிர்ச்சி.
வாடா!
அவன் சிரித்த சிரிப்பில் மிகுந்த முன்னெச்சரிக்கை மணி தெரிந்தது.
என்னடா? ஏதோ அஷோக் சொன்னான்.....மார்க் வந்துடுச்சா? எவ்வளவுடா?
அவன் ஏதோ உளர்றாண்டா...அவன் கிட்ட சும்மாங்காட்டி ஜோக்குக்கு சொன்னேன்...அதை போய் நிஜம்னு நினைச்சிகிட்டான்....அதுக்குத்தான் நீ வந்தியா?
அவன் சொல்லும் விதத்திலேயே மார்க் வந்திருக்கும் என்பதை புரிந்து கொண்டேன். இந்த மாதிரி சூழ்நிலைகளுக்கெல்லாம் அவன் அப்பாதான் அபயம் தருபவர் என்று தெரியும். அவன் அப்பா என்னையும், அவனையும் ஒரே மாதிரி பார்ப்பவர். அவர் வரக் காத்திருந்தேன்.
அன்றைக்கென்று என்னை விரட்டிக் கொண்டிருந்தான்.
ஏண்டா....சின்னத்தம்பி போகல..பேலஸ்ல....காத்து வாங்குதாம்.....போலாமா?
இல்லடா...எனக்கு இன்டெரெஸ்ட் இல்ல
ஏண்டா?
ஒரு வேலை இருக்கு...
அவன் அப்பா அதற்குள் சைக்கிளில் வந்து விட்டார். அவரைப் பார்த்ததும் இவன் குடு குடு வென்று ஓடி , கண் ஜாடை காட்டியதெல்லாம் நான் கண்டு கொள்ளவில்லை.
வா கண்ணு...
எப்போதும் போல் அழைக்கும் எங்கள் ஊர் அழைப்பு.
இவன் கண் ஜாடை காட்டியதை மறுத்து, அட விடு சிவா....நம்ம வெங்கட்தானே... சொன்னா என்ன தப்பு?...கண்ணு சிவாவோட மார்க் பாரு
சட்டைப் பையில் இருந்து, துண்டு சீட்டில் பேனாவில் எழுதி இருந்த மார்க் விவரத்தை கொடுத்தார்.
மொத்தம் 388.
எனக்கு உலகே ஸ்தம்பித்தது விடும் போல் இருந்தது. இவனே இவ்வளவுதான் என்றால்? என் கதி. இவன் மேத்ஸில் புலி. நான் முந்நூற்றைம்பது கூட தாண்ட மாட்டேனோ?
அந்த ரெண்டு நாட்களும் நான் சரியாக சாப்பிடவில்லை. தூங்கவில்லை. அவனைப் பார்க்க கடைக்கும் செல்லவில்லை.
தினத்தந்தி காலைப்பதிப்பில் என் நம்பர் பாஸ் என்று சொன்னபோது கூட, அரைக்கிணறு தாண்டிய அவஸ்தைதான் நீடித்தது.
மதியம் சாப்பிட்டுக் கொண்டிருந்த பொழுது, தம்பி புயல் போல வந்து,
"நீ சாப்பிட்டு இருக்கியா? உன் மார்க் எல்லாம் வந்திடுச்சாம்...."
"எவ்வளவு"
"எனக்கு தெரியல ...ஸ்கூல்லதான் தெரியும் "
அந்த ஒரு வருஷத்தின் அவஸ்தையை விழுங்க முடியாமல், அவசர, அவசரமாய் சாப்பாட்டை உள்ளே தள்ளி விட்டு, பள்ளியை நோக்கி விரைந்தேன்.
ஸ்கூலில் ஒரே கூட்டம். நிறைய பேரின் பெற்றோர்கள் தெரிந்தார்கள். சிலர் ஸ்வீட் ஊட்டிக்கு கொண்டிருந்தார்கள். அத்தனைக்கு கூட்டத்திலும், சிவா என்னைக் கண்டுபிடித்து விட்டான்.
"வாடா...ஏண்டா ரெண்டு நாளா வரல?"
புளுகினேன்...
"தாத்தாவுக்கு உடம்பு சரி இல்ல....அவரை பார்க்க ஊருக்கு போய் இருந்தேன்...சரி, உன் மார்க் அதேதான?"
"அதே 388 தான்.....உன்னோடது?
"இன்னும் தெரியல....காலையிலே பாஸுன்னு வந்திடுச்சு...சரி...வா உள்ளே போய் கேட்கலாம் "
ஆபிஸ் ரூமில் இருந்த க்ளெர்க் நிறைய பேருக்கு பதில் சொல்லி கோபத்தில் இருந்தார்.
"யோவ்! போயிட்டு அப்புறமா வாங்க....காலையிலிருந்து ஒரு சொட்டு தண்ணி கூட குடிக்கல "
சார்...சார்...ப்ளீஸ் சார்...இவன் மார்க் மட்டும் சொல்லிடுங்க.....
சிவா என்னை விட ஆர்வத்தில் இருந்தான்.
ரோல் நம்பர்?
176174
இப்போதெல்லாம் கம்ப்யூட்டரில் ரோல் நம்பரை தட்டி விட்டு, கம்ப்யூட்டர் பிராசஸ் செய்யும் நேரத்தில் நாம் அடையும் அதே பீதியை உணர்ந்தேன்.
ஒவ்வொரு பேப்பர் ஆக தேடினவர், கடைசித் தாளில், எண் கிடைத்து,
"பேர் வெங்கட்ராமனா?"
"ஆமாம் சார்"
"389"
அந்த நொடியில் நான் அடைந்த துல்லியமான சந்தோஷத்தை பிற்பாடு மீண்டும் என்றும் அடையவே இல்லை.
ஊருக்கு வரும் மாமாவிற்கெல்லாம் இது ஒரு பொழுதுபோக்காக இருந்தது.
வாடா! இந்த வருஷம் எஸ் எஸ் எல் சி யா? இதுதான் உன் வாழ்க்கையையே தீர்மானிக்கப் போறது....நன்னா படி
போதும் போதாதற்கு டியூஷன் வேறு சேர்த்து விட்டார்கள். காலையிலும், மாலையிலும் இரண்டு பேட்ச்கள். தெரு முழுவதும் சைக்கிள்கள் நிறைந்திருக்கும்.
இந்த அவஸ்தையிலும், எனக்கு ஒரே ஒரு எண்ணம் மட்டும் மிகத் தெளிவாக இருந்தது. எப்படியாவது சிவாவை விட மார்க் எடுத்து விட வேண்டும்.
சிவாவுக்கும் எனக்குமான நட்பு சங்ககால நட்பு. ஒண்ணாவதிலிருந்து பத்தாவது வரை ஒரே வகுப்பில் படித்தோம். சேர்ந்து நிறைய சினிமா பார்த்திருக்கிறோம்.
எங்களுக்குள் மற்றதில் அத்தனை நட்பு இருந்தாலும், படிப்பு விஷயத்தில் நாங்கள் என்றும் நேர்மையாக இருந்து கொண்டது இல்லை. இது இருவருக்கும் தெரியும். வெளிக்காட்டிக் கொண்டதே இல்லை.
மிக நன்றாக பரிட்சை எழுதி விட்டு, முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு வருவான்.
எப்படிடா எழுதின?
ச்
ஏண்டா?
ஐந்து மார்க் கணக்கு ஒண்ணு விட்டுட்டேண்டா....நீ?
மனதிற்குள் சந்தோஷமாக இருந்தாலும், அதே சோக பாவத்தோடு
நான் க்ராப் சரியா போடலடா...
எங்களுக்கு போட்டியாக நாங்கள் வேறு யாரையும் வைத்துக் கொண்டதில்லை. இன்னும் சொல்லப் போனால், போட்டியே எங்களுக்குள்தான். இருப்பினும் எங்கள் நட்பு வேறு பல நல்ல காரணங்களால் தொடர்ந்தது.
ஒவ்வொரு முறை மார்க் ஷீட் கொடுக்கும் பொழுது, சதியாக அவன் மார்க்கை முதலில் தெரிந்து கொள்ள முயற்சி செய்வேன். அவனும் லேசுப்பட்டவன் இல்லை. சாதாரணத்தில் சொல்லி விட மாட்டான். அவனை கொஞ்சம் தாஜா செய்து, கரெக்ட் பண்ணி மார்க் தெரிந்து கொள்வதற்குள் போதும் போதும் ஆகி விடும்.
இதற்கு நடுவில் எங்களின் எஸ் எஸ் எல் சீ பரிட்சையும் நடந்து முடிந்தது.
லீவில் நான் தினமும் சிவாவின் கடைக்கு செல்வேன். அது ஒரு உலர்சலவையகம். நாங்கள் பாட்டிற்கு ஏதோ பேசிக்கொண்டிருப்போம். யாரோ வந்து பில்லைத் தருவார்கள். இவன் நம்பரை பார்த்து, துணி எடுத்துக் கொடுப்பான். மீண்டும் பேச்சைத் தொடருவோம். எங்களுக்கு விஷயமா இல்லை?
அப்போது ரிலீஸ் ஆன புது சினிமா, கிரிக்கெட் மேட்ச், ஸ்கூல், கடைசியாக எங்களின் வரப் போகும் எஸ் எஸ் எல் சீ ரிசல்ட்.
ரிசல்ட்டை நினைக்க நினைக்க எங்களுக்கு திகில் ஆக இருந்தது. தினமும் கேட்பான்.
"எவ்வளவுடா வரும்? ஒரு முந்நூற்று ஐம்பது?"
"சே சே...அவ்வளவு கம்மியா வராது...மினிமம் நானூறுக்கு குறையாது "
"எப்படி சொல்றே?"
"தமிழ் எடுத்துக்கோ ......முதல் தாள்...ஒரு தொன்னூறு வை..."
"நான்லாம் அவ்வளவு நல்லா எழுதலப்பா...ஒரு எண்பது வை...."
"சரி...எண்பது .....அப்புறம், ரெண்டாவது தாள், ஒரு எண்பது வை..."
"ரெண்டாவது தாள் ரொம்ப கஷ்டம்......இலக்கணக்குறிப்பிலேயே எட்டு மார்க் போயிடிச்சு...அறுபது வை"
அவன் இப்படி சொல்லி, சொல்லியே முன்னூற்றி ஐம்பதுக்கு கொண்டு வந்து விடுவான்.
அவனே முன்னூற்றி ஐம்பது என்றால்? என் கதியை நினைத்து எங்கேயாவது அழ வேண்டும் போலிருந்தது. இத்தனைக்கும் அவனுக்கு மேத்ஸ் தண்ணி பட்ட பாடு. நான் எப்போதும் சொதப்புவேன்.
இப்படி ஒருவாறு எங்கள் நட்பு சென்று கொண்டிருந்த தினங்களில், அஷோக் ரகசியமாக வந்து சொன்னான்.
"வெங்கட்...உனக்கு விஷயம் தெரியுமா? சிவாவோட எஸ் எஸ் எல் சீ ரிசல்ட் தெரிஞ்சிடிச்சி"
நான் அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை.
"இன்னும் ரெண்டு நாள் கழிச்சுத்தான் ரிசல்ட் வரும்? எப்படிடா அவன் மார்க் மட்டும் தெரிஞ்சது ? எவ்வளவுடா?
"எப்படின்னு தெரியல....ஏதோ தெரிஞ்சவங்க மெட்ராஸ்ல இருக்காங்களாம்...அவங்க மூலமா வாங்கி இருக்காங்க... ஆனா, மார்க் எவ்வளவுன்னு சொல்ல மாட்டேங்கறான்"
நான் உடனே விரைந்தேன்.
என்னைப் பார்த்ததும் சிவாவிற்கு அதிர்ச்சி.
வாடா!
அவன் சிரித்த சிரிப்பில் மிகுந்த முன்னெச்சரிக்கை மணி தெரிந்தது.
என்னடா? ஏதோ அஷோக் சொன்னான்.....மார்க் வந்துடுச்சா? எவ்வளவுடா?
அவன் ஏதோ உளர்றாண்டா...அவன் கிட்ட சும்மாங்காட்டி ஜோக்குக்கு சொன்னேன்...அதை போய் நிஜம்னு நினைச்சிகிட்டான்....அதுக்குத்தான் நீ வந்தியா?
அவன் சொல்லும் விதத்திலேயே மார்க் வந்திருக்கும் என்பதை புரிந்து கொண்டேன். இந்த மாதிரி சூழ்நிலைகளுக்கெல்லாம் அவன் அப்பாதான் அபயம் தருபவர் என்று தெரியும். அவன் அப்பா என்னையும், அவனையும் ஒரே மாதிரி பார்ப்பவர். அவர் வரக் காத்திருந்தேன்.
அன்றைக்கென்று என்னை விரட்டிக் கொண்டிருந்தான்.
ஏண்டா....சின்னத்தம்பி போகல..பேலஸ்ல....காத்து வாங்குதாம்.....போலாமா?
இல்லடா...எனக்கு இன்டெரெஸ்ட் இல்ல
ஏண்டா?
ஒரு வேலை இருக்கு...
அவன் அப்பா அதற்குள் சைக்கிளில் வந்து விட்டார். அவரைப் பார்த்ததும் இவன் குடு குடு வென்று ஓடி , கண் ஜாடை காட்டியதெல்லாம் நான் கண்டு கொள்ளவில்லை.
வா கண்ணு...
எப்போதும் போல் அழைக்கும் எங்கள் ஊர் அழைப்பு.
இவன் கண் ஜாடை காட்டியதை மறுத்து, அட விடு சிவா....நம்ம வெங்கட்தானே... சொன்னா என்ன தப்பு?...கண்ணு சிவாவோட மார்க் பாரு
சட்டைப் பையில் இருந்து, துண்டு சீட்டில் பேனாவில் எழுதி இருந்த மார்க் விவரத்தை கொடுத்தார்.
மொத்தம் 388.
எனக்கு உலகே ஸ்தம்பித்தது விடும் போல் இருந்தது. இவனே இவ்வளவுதான் என்றால்? என் கதி. இவன் மேத்ஸில் புலி. நான் முந்நூற்றைம்பது கூட தாண்ட மாட்டேனோ?
அந்த ரெண்டு நாட்களும் நான் சரியாக சாப்பிடவில்லை. தூங்கவில்லை. அவனைப் பார்க்க கடைக்கும் செல்லவில்லை.
தினத்தந்தி காலைப்பதிப்பில் என் நம்பர் பாஸ் என்று சொன்னபோது கூட, அரைக்கிணறு தாண்டிய அவஸ்தைதான் நீடித்தது.
மதியம் சாப்பிட்டுக் கொண்டிருந்த பொழுது, தம்பி புயல் போல வந்து,
"நீ சாப்பிட்டு இருக்கியா? உன் மார்க் எல்லாம் வந்திடுச்சாம்...."
"எவ்வளவு"
"எனக்கு தெரியல ...ஸ்கூல்லதான் தெரியும் "
அந்த ஒரு வருஷத்தின் அவஸ்தையை விழுங்க முடியாமல், அவசர, அவசரமாய் சாப்பாட்டை உள்ளே தள்ளி விட்டு, பள்ளியை நோக்கி விரைந்தேன்.
ஸ்கூலில் ஒரே கூட்டம். நிறைய பேரின் பெற்றோர்கள் தெரிந்தார்கள். சிலர் ஸ்வீட் ஊட்டிக்கு கொண்டிருந்தார்கள். அத்தனைக்கு கூட்டத்திலும், சிவா என்னைக் கண்டுபிடித்து விட்டான்.
"வாடா...ஏண்டா ரெண்டு நாளா வரல?"
புளுகினேன்...
"தாத்தாவுக்கு உடம்பு சரி இல்ல....அவரை பார்க்க ஊருக்கு போய் இருந்தேன்...சரி, உன் மார்க் அதேதான?"
"அதே 388 தான்.....உன்னோடது?
"இன்னும் தெரியல....காலையிலே பாஸுன்னு வந்திடுச்சு...சரி...வா உள்ளே போய் கேட்கலாம் "
ஆபிஸ் ரூமில் இருந்த க்ளெர்க் நிறைய பேருக்கு பதில் சொல்லி கோபத்தில் இருந்தார்.
"யோவ்! போயிட்டு அப்புறமா வாங்க....காலையிலிருந்து ஒரு சொட்டு தண்ணி கூட குடிக்கல "
சார்...சார்...ப்ளீஸ் சார்...இவன் மார்க் மட்டும் சொல்லிடுங்க.....
சிவா என்னை விட ஆர்வத்தில் இருந்தான்.
ரோல் நம்பர்?
176174
இப்போதெல்லாம் கம்ப்யூட்டரில் ரோல் நம்பரை தட்டி விட்டு, கம்ப்யூட்டர் பிராசஸ் செய்யும் நேரத்தில் நாம் அடையும் அதே பீதியை உணர்ந்தேன்.
ஒவ்வொரு பேப்பர் ஆக தேடினவர், கடைசித் தாளில், எண் கிடைத்து,
"பேர் வெங்கட்ராமனா?"
"ஆமாம் சார்"
"389"
அந்த நொடியில் நான் அடைந்த துல்லியமான சந்தோஷத்தை பிற்பாடு மீண்டும் என்றும் அடையவே இல்லை.
No comments:
Post a Comment